25.10.12

என் கவிதைகளுக்கு கை ,கால் வரையும் போது ,,,,,

 


என் கவிதைகளுக்கு  வண்ணம் பூசி  பார்த்தேன்,,,,

தலை முடி வரையும்போது 
சிலிப்பிக்கொண்டது,,,

கை ,கால்கள் வரையும்போது
உள்ளே இழுத்துக்கொண்டது....

கண்கள்  வரையும் போது ,,,,
என் தூரிகை பட்டு
அதன் இமை மூடிக்கொண்டது ,,,

கடைசியில்  எதையோ வரையபோய்,,,,

என் தூரிகை  நீண்டு கொண்டது ,,,

என்னவளே ,,,,,,

கடைசியில் ,,,,

வண்ணம் தீர்ந்து போய்

என்  தூரிகை  உன் பெயர் மட்டுமே சொன்னது ,,,,

16.1.12

சரி விடு,,,,,,,,,,,,,,,,,,,,,

அதென்ன ?
நேற்று   
கனவில் வந்ததும் சட்டேன்று 
மறைந்துவிட்டாய் ...... நீ 
பதறி விட்டேன் நான் ,,,,

சரி விடு,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்னும் நிறைய 
இருக்கின்றன ,,,

கனவுகளும்  இரவுகளும் .....